search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழனி கோவில் சிலை"

    பழனி கோவில் சிலை மோசடி வழக்கில் முன்னாள் அறநிலையத்துறை அதிகாரி கும்பகோணம் கோர்ட்டில் சரண் அடைந்தார். #Idolsmuggling

    கும்பகோணம்:

    பழனி பால தண்டாயுத பாணி சிலை வடிவமைப் பதில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து சிலையை வடிவமைத்த கோவில் ஸ்தபதி முத்தையா என்பவர் பழனி கோவில் இணை ஆணையராக பதவி வகித்த ராஜா 2 பேரையும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கைது செய்தனர்.

    மேலும் இந்தவழக்கில் நகை சரிபார்ப்பு அலுவலர்களான புகழேந்தி, தேவேந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் தற்போது ஜாமீனில் வெளியில் வந்துள்ளனர்.

    மேலும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்ட முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால் என்பவரை போலீசார் தேடி வந்தனர். அவர் தலைமறைவாக இருந்தார். அவரைப் பிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ. 20 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஏற்கனவே அறிவித்திருந்தனர். இதற்கிடையில் 2முறை முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் தனபால் மனு தாக்கல் செய்திருந்தார். அதன்பிறகு கடந்த 15 தினங்களுக்கு முன்பாக மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவை விசாரித்த நீதிபதி இந்தவழக்கு நடைபெறும் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சரண் அடைந்து முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளுமாறும் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரின் நேரடி கண்காணிப்பில் கும்பகோணத்தில் 60 நாட்கள் தங்கியிருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    இதனால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், தனபால் வருகைக்காக கும்பகோணம் நீதிமன்றத்தில் தினமும் காத்திருந்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை கும்பகோணம் 2-வது நடுவர் நீதிமன்றத்தில் தனபால் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை அடுத்து காலை 10 மணிக்கு நீதிமன்றத்தில் தனபால் சரண் அடைந்தார்.

    அப்போது மனுவை விசாரித்த நீதிபதி கோதண்டராமன் விசாரணையை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்து அதுவரை நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியில் செல்லக் கூடாது என உத்தரவிட்டார். #Idolsmuggling

    பழனி கோவில் சிலை மோசடி விவகாரத்தில் முக்கிய பிரமுகர்கள் சிக்கியதால் டி.எஸ்.பி. இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. #Idolsmuggling

    பழனி:

    பழனி கோவில் மூலவர் சன்னதியில் உள்ள பழமை வாய்ந்த நவபாஷாண சிலைக்கு பதிலாக புதிய சிலை கடந்த 2004-ம் ஆண்டு புதிதாக வடிவமைக்கப்பட்டது. இதில் மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையில் டி.எஸ்.பி. கருணாகரன் மற்றும் போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கினர்.

    குறிப்பாக டி.எஸ்.பி. கருணாகரன் 2 மாதமாக பழனியில் முகாமிட்டு குருக்கள் மற்றும் அதிகாரிகளிடம் தீவிர விசாரணை மேற் கொண்டார்.

    இவ்வழக்கு தொடர்பாக தலைமை ஸ்தபதி முத்தையா, முன்னாள் இணை ஆணையர் ராஜா, அதிகாரிகள் புகழேந்தி, தேவேந்திரன் ஆகியோரை கைது செய்தனர்.

    நேர்மையான முறையில் விசாரணை நடைபெற்று வருவதாக பக்தர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில் திடீரென சி.பி.சி.ஐ.டி.க்கு சிலை கடதல் வழக்கு மாற்றப்பட்டது. அதன்பின் கோர்ட்டில் முறையிட்டு மீண்டும் சிலை கடத்தல் பிரிவு போலீசாரே விசாரணை நடத்தி வந்தனர்.

    தற்போது டி.எஸ்.பி. கருணாகரன் கோவை மின் திருட்டு தடுப்பு பிரிவுக்கு திடீரென மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பழனி டி.எஸ்.பி. வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து பக்தர்கள் கூறுகையில், முக்கிய பிரமுகர்கள், அரசியல் வாதிகள், அதிகாரிகள் சிலை கடத்தல் வழக்கில் சிக்கியதால் டி.எஸ்.பி. மாற்றப்பட்டுள்ளார். நேர்மையான முறையில் சிலை கடத்தலை வெளிகொண்டு வந்த ஐ.ஜி. பொன்மாணிக்கவேலுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கோர்ட்டிலும் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தங்களுக்கு போதுமான ஒத்துழைப்பு அரசு தரவில்லை என குற்றம்சாட்டியிருந்தார்.

    கோர்ட்டு உத்தரவால் மீண்டும் சிலை கடத்தல் பிரிவு போலீசாரே விசாரித்ததால் பல உண்மைகள் வெளிவந்து குற்றவாளிகளை நெருங்கிய நிலையில் இந்த இடமாற்றம் நடந்துள்ளது. இதனால் பக்தர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    சிலை மோசடி வழக்கில் முக்கிய புள்ளிகளை காப்பாற்ற முயற்சிக்கின்றனர். மீண்டும் டி.எஸ்.பி. கருணாகரனே விசாரித்தால் மட்டுமே பல உண்மைகள் வெளிவரும் என்றனர். #Idolsmuggling

    பழனி கோவில் சிலை மோசடியில் முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை ஆணையரும் சம்மந்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. #Palanitemple

    பழனி:

    பழனி முருகன் கோவிலில் மூலவர் சன்னதியில் உள்ள நவபாஷாண சிலையை மறைத்து 200 கிலோ எடையில் ஐம்பொன்சிலை செய்யப்பட்டது. இந்த சிலை அமைத்ததில் மோசடி நடந்தது தெரியவரவே ஸ்தபதி முத்தையா, அப்போதைய இணை ஆணையர் ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் நடத்திய விசாரணையில் முன்னாள் உதவி ஆணையர் புகழேந்தி, நகை மதிப்பீட்டாளர் தேவேந்திரன் ஆகியோரும் உடந்தையாக இருந்தது தெரியவரவே அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

    சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் கடந்த 4 நாட்களாக நடத்திய விசாரணையில் மேலும் சில முக்கிய ஆதாரங்களை திரட்டியுள்ளனர்.

    மேலும் முன்னாள் ஊழியர்கள், கோவில் அர்ச்சகர்கள் ஆகியோரது வீடுகளுக்கே சென்று விசாரணை நடத்தியதுடன் அவர்கள் அளித்த தகவல்களையும் பதிவு செய்து கொண்டனர்.

    இது குறித்து போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கையில், பழனி கோவில் சிலை மோசடியில் முக்கிய திருப்பமாக கடந்த 2004ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக இருந்த தனபால் சம்மந்தப்பட்டிருப்ழுது தெரிய வந்துள்ளது.

    புதிய சிலை தயாரிக்க முடிவெடுத்தது, அதற்கு தங்கம் உள்பட உலோகங்கள் எவ்வளவு சேர்க்க வேண்டும், எவ்வாறு சிலை அமைக்க வேண்டும் என்பது போன்ற ஆலோசனைகள் வழங்குவதற்கும் உத்தரவுகள் பிறப்பிக்கும் அதிகாரியாகவும் தனபால் இருந்துள்ளார்.

    கடந்த 4 நாட்களாக பல்வேறு ஊழியர்கள் மற்றும் குருக்களிடம் நடத்திய விசாரணையில் முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளது. அதன்படி தற்போது பட்டுக்கோட்டை அருகில் உள்ள முத்தாக்குறிச்சியில் வசிக்கும் தனபால் வீட்டிற்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சென்றுள்ளனர்.

    ஆனால் அதிகாரிகள் வருவதை அறிந்ததும் தனபால் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். எனவே இவரையும் போலீசார் தங்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர உள்ளனர். அதன்பின்பு மேலும் சிலரை கைது செய்யவும் திட்டமிட்டுள்ளனர் என்று தெரிவித்தனர்.

    பழனி கோவில் சிலை மோசடியில் அதிரடி திருப்பமாக முன்னாள் இந்துசமய அறநிலையத்துறை ஆணையரை அதிகாரிகள் நெருங்கி உள்ளதால் அடுத்து யார்? கைது செய்யப்படுவார்கள் என்ற பரபரப்பு எழுந்துள்ளது. #Palanitemple

    பழனி கோவில் சிலை மோசடி வழக்கில் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஐம்பொன்சிலையை சென்னை ஐ.ஐ.டி. குழுவினர் ஆய்வு செய்தனர்.

    பழனி:

    பழனி முருகன் கோவில் மூலவர் சிலை நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. இந்த சிலை சேதம் அடைந்ததாக கூறி கடந்த 2003-ம் ஆண்டு புதிய சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக கோவில் ஸ்தபதி முத்தையா தலைமையில் சிலை அமைப்புக்குழுவினர் 200 கிலோ தங்கத்தில் ஐம்பொன்னால் புதிய சிலையை வடிவமைத்தனர்.

    கடந்த 2004-ம் ஆண்டு இந்த சிலை கோவில் மூலவர் சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஒரே சன்னதியில் 2 சிலைகள் வைக்க பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஐம்பொன்சிலை அகற்றப்பட்டது. தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் ஆய்வு செய்து வந்தனர்.

    பழனி கோவிலில் புதிதாக செய்யப்பட்ட ஐம்பொன்சிலையை ஆய்வு செய்தபோது அது போலியானது என தெரிய வந்தது. இதனால் இந்த சிலை மோசடியில் ஈடுபட்ட ஸ்தபதி முத்தையா, அப்போதைய கோவில் இணை ஆணையர் ராஜா ஆகியோரை கைது செய்தனர்.

    இதனிடையே சிலை மோசடி வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. சரியான பாதையில் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் அதனை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றியதை பக்தர்கள் எதிர்த்தனர்.

    இது குறித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் விசாரணக்கு தடையில்லை என உத்தரவிட்டது. இதனையடுத்து மீண்டும் விசாரணையை தொடங்கிய குழுவினர் கடந்த வாரம் 2004-ம் ஆண்டு கோவில் தலைமை அர்ச்சகராக இருந்த சுகிசிவத்தின் மகனிடம் விசாரணை நடத்தினர்.

    மேலும் கோவில் மேலாளர் உள்பட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கோவிலில் உள்ள சிலைகளையும் பார்வையிட்டு அக்குழுவினர் ஆய்வு செய்தனர்.

    இன்று பழனி கோவிலுக்கு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் மீண்டும் வருகை தந்தனர். சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் முருகையன் தலைமையிலான குழுவினர் பொன்மாணிக்கவேல் முன்னிலையில் ஐம்பொன் சிலையை ஆய்வு செய்து வருகின்றனனர்.

    இதனையடுத்து மேலும் சிலரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ள குழுவினர் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களை கைது செய்யவும் முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    இதனால் பழனி கோவிலின் சிலை மோசடி வழக்கு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

    ×